728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 21, 2017

    3 கோடி மக்களை படுகொலை செய்ய திட்டம்- பில்கேட்ஸ் அதிர்ச்சி தகவல்..!

    சர்வதேச அளவில் கொடிய நோய்களை பரப்பி சுமார் 3 கோடி மக்கள் தொகையை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லும் சூழல் உருவாகியுள்ளதாக உலக கோடீஸ்வரரான பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுதுள்ளார்.

    இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள Royal United Services Institute நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பில் கேட்ஸ் நேற்று பங்கேற்றுள்ளார்.

    அப்போது, சர்வதேச அளவில் தீவிரவாதிகள் மூலம் மக்கள் எதிர்க்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளார்.

    அதில், அணுகுண்டு ஆயுதங்களை விட தீவிரவாதிகள் தற்போது புதிய ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதாவது, பெரியம்மை உள்ளிட்ட கொடிய நோய்களை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் சுமார் 3 கோடி மக்கள் வரை கொல்லப்பட வாய்ப்புள்ளது என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நவீன உலகத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு மிக எளிதாக மக்கள் சென்று வருகிறார்கள்.

    இதுபோன்ற ஒரு சூழலில் கொடிய நோய்களை பரப்பினால் அவை பல நாடுகளில் வேகமாக பரவி கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கும்.

    உதாரணத்திற்கு, கடந்த 1919-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பரவிய கொடிய நோய் ஒன்று 10 கோடி மக்களை பலி வாங்கியது.

    இதே போன்ற ஒரு கொடிய நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பலவீனமான நாடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பணக்கார நாடுகள் அதிகளவிலான நிதியுதவியை அளிக்க வேண்டும்.

    பிரித்தானிய அரசும் இதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

    வேதிப்பொருட்கள் மற்றும் நோய்களை பரப்பி தாக்குதல் நடத்த முயற்சித்து வரும் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் எனவும் பில்கேட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 3 கோடி மக்களை படுகொலை செய்ய திட்டம்- பில்கேட்ஸ் அதிர்ச்சி தகவல்..! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top