728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 26, 2017

    டோனிக்காக என் உடைகளை கூட விற்க தயார்..! யார் கூறியது தெரியுமா?

    டோனியை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் போட்டிகளில் ஏலத்தில் எடுக்க தனது உடைகளை கூட விற்க தயார் என கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மகேந்திர சிங் டோனி நடப்பு ஐபிஎல் தொடரில் புனே அணியில் விளையாடி வருகிறார்.

    கடந்த 8 வருடங்களாக சென்னை அணியில் விளையாடிய டோனியை போன ஐபிஎல்-லில் புனே அணி வாங்கியது.

    இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவரிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்சியில் டோனி விளையாடுவதை காண விரும்புகிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ஷாருக்கான், டோனியை கொல்கத்தா அணிக்கு வாங்குவதற்காக எனது உடைகளை கூட விற்க தயாராக உள்ளேன்.

    ஆனால் அதற்கு குறைந்தபட்சம் டோனியின் பெயர் ஏலத்தில் வர வேண்டும் என கூறியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டோனிக்காக என் உடைகளை கூட விற்க தயார்..! யார் கூறியது தெரியுமா? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top