728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 24, 2017

    ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடக்கு முதல்வர்

    வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அடுத்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.

    முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கில் நிலவும் நெருக்கடி மற்றும் அது சம்பந்தமான எழுந்துள்ள எதிர்ப்புகள் சம்பந்தமாக கடிதம் மூலம் அறிவித்திருந்தமை சம்பந்தமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை, காணி பிரச்சினை, வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

    எவ்வாறாயினும் ஜனாதிபதியிடம் பிரச்சினைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடக்கு முதல்வர் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top