கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜேர்மனியின் Hamburg பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் நுழைந்த Ahmad (27) என்னும் பாலஸ்தீனிய நபர் தாக்குதல் நடத்தினார்.
இதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் குத்திக் கொன்ற வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின்போது ஆறு பேர் காயமடைந்தனர், கொலை, கொலை முயற்சி மற்றும் காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக அவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது அவன் உலகம் முழுவதிலுமுள்ள ஜிகாதுக்கு தன் பங்களிப்பை செய்வதற்காக இந்தக் கொலையைச் செய்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.
அவனுக்கு ஐ.எஸ் தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை, ஏனென்றால் விசாரணையின்போது அவன் தனது தாடியை எடுத்துவிட்டதோடு நீதிமன்றத்திற்கு வந்திருந்த பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு வந்த Ahmadக்கு ஏற்கனவே Norway, Sweden மற்றும் Spain நாடுகளில் புகலிடம் மறுக்கப்பட்டிருந்தது.
ஜேர்மனியிலும் புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment