Zurich, Basel மற்றும் Nyon போன்ற ரயில் நிலையங்களின் நிர்வாகம், புகைபிடிக்க தடை விதித்துள்ளதை எதிர்த்து Green-Liberal கட்சியைச் சேர்ந்த Dietrich Weidmann என்னும் அரசியல்வாதி Zurich மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது மக்களின் உரிமையை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்ட அவர், இது ஒரு அர்த்தமற்ற தடை எனவும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே நிர்வாகம் சுகாதார ஆசானாக மாற வேண்டிய அவசியம் இல்லை. மக்களை புகைபிடிக்க வேண்டாம் எனக்கூறும் அதிகாரம் ரயில்வே நிர்வாகத்துக்கு இல்லை. அது தன் சேவை சார்ந்த வேலையை மட்டும் செய்யட்டும் அனெ தெரிவித்தார்.
எனினும் ஒரு ஆச்சரியமான விடயம் என்னவெனில், இவ்வாறு உயிரைக்கொடுத்து வழக்கு தொடர்ந்திருக்கும் அரசியல்வாதி Dietrich Weidmann, புகை பிடிக்கும் பழக்கமில்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment