தற்போது இந்திய ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுயுள்ளார்.
ராணுவ வருடாந்திர கருத்தரங்கில் பங்கேற்ற இவர் பின்வருமாரு கூறினார், இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி), பகுதியில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி, அத்துமீறல் மற்றும் மோதல்போக்கு காரணமாக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானில் மத அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது. தீவிரவாத அமைப்பின் சிந்தாந்தத்தை கிழக்கு நோக்கி பரப்பும் ஊடகமாக பாகிஸ்தான் விளங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment