728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, March 1, 2018

    நேர் எதிர் துருவங்களாக டோனி- அஸ்வின்: தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


    இதுவரை ஒரே அணியில் ஆடிய டோனி, அஸ்வின் இருவரும் வருகின்ற ஐபிஎல் சீசனில் எதிர் எதிர் துருவங்களாக களமிறங்க உள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் டோனி.

    இந்திய அணி மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்கு தலைமை தாங்கி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் டோனி என்பது வரலாறு.

    ஆனால் இந்த ஐபிஎல் சீசன் சற்று வித்யாசமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், இரண்டு வரும் தடையில் இருந்த சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

    அதேபோல் கடந்த காலங்களில் சென்னை அணியின் சிறந்த பந்துவீச்சளாரக செயல்பட்ட அஸ்வினோ, தற்போது பஞ்சாப் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இதனால் ஒரே அணியில் விளையாடிய டோனியும் அஸ்வினும் தற்போது நேர் எதிர் துருவங்களாக களமிறங்க உள்ளனர். இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 15-ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்த இரண்டு வீரர்களையும் கேலி செய்யும் வகையில் ரசிகர்கள் சில மீம்ஸ்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    மேலும், தற்போது பஞ்சாப் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வினுக்கு இதற்கு முன் தலைமை பொருப்பில் அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நேர் எதிர் துருவங்களாக டோனி- அஸ்வின்: தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top