நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை குறித்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபையின் புத்தாக்கல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கம்பஹா ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், பேஹலியகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் குறித்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment