728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, February 21, 2018

    இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவானி


    இந்திய விமானப் படையில் போர் விமானத்தைச் செலுத்தும் முதல் பெண் விமானியாக அவானி சதுர்வேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்திய விமானப் படையில் போர் விமானிகளாக பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி பல சவாலான பயிற்சிகளைப் பெற்றனர். பயிற்சிகள் முடிவுற்று அவர்கள் முறைப்படி விமானப் படை பணியில் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், புதன்கிழமை குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை அவானி சதுர்வேதி தனியாக ஓட்டிச்சென்றார். இதன் மூலம் இந்திய விமானப் படையில் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் சத்னாவைச் சேர்ந்த அவானி சதுர்வேதி. இவரது சகோதரும் ராணுவத்தில் பணியாற்றுபவர். அவரைப் போல் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசையில் விமானப் படையில் இணைந்ததாகக் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவானி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top