728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, February 22, 2018

    மகளுக்காக பிச்சை எடுத்து கழிவறை கட்டிய பெண்; மாநில அரசு நிதியளித்து கௌரவம்!


    தனது மகளின் தேவைக்காக, பிச்சை எடுத்து பெண் ஒருவர் கழிவறை கட்டியுள்ளார்.

    பீகார் மாநிலம் சுபவுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமினா காடூன். இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்துள்ளார். இதையடுத்து தனது மகளுடன் குடிசை ஒன்றில் வசித்து வருகிறார்.

    ஏழ்மை நிலை காரணமாக, கழிவறை வசதியை அமைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தனது மகள் வெளியில் சென்று கடன்களைக் கழிப்பதை கண்டு வருத்தமடைந்தார்.

    இதையடுத்து எப்படியாவது கழிவறை கட்ட வேண்டும் என்று அமினா முடிவு செய்தார். தன்னிடம் போதிய பணமில்லாததால், பிச்சை எடுக்க முடிவு செய்தார்.

    தங்கள் வீட்டில் கழிவறை கட்ட வேண்டும். அதற்காக பண உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். இதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, வெற்றிகரமாக கழிவறை கட்டியுள்ளார்.

    இந்த செய்தி அறிந்த மாநில அரசு, அமினாவிற்கு ரூ.12,000 நிதியுதவியாக அளித்து கௌரவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகளுக்காக பிச்சை எடுத்து கழிவறை கட்டிய பெண்; மாநில அரசு நிதியளித்து கௌரவம்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top