இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை துபாயில் மரணமடைந்தார், இவரது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து துபாய் அரசின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டது. இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு அவருக்கு தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்தது, பின்னர் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இந்த விவகாரம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நடிகைக்கு எப்படி தேசிய கொடியை போர்த்தலாம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

0 comments:
Post a Comment