விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் வரும் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அடுத்து இலங்கையில் நடைப்பெறும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த போட்டி மார்ச் 6-18ம் தேதி வரை நடக்க உள்ளது. முதல் போட்டி இந்தியா - இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
கோலிக்கு ஓய்வு?
கோலி தொடர்ச்சியாக பல தொடர்களில் விளையாடி வருவதால் கோலி விரும்பினால் இந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதும், ஓய்வில் இருப்பதும் அவர் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சீசனில் இந்தியா பங்கேற்கும் கடைசி போட்டி தொடர் இதுவாகும். அதனால் கோலி இதில் விளையாடத் தான் விரும்புவார் என தெரிகின்றது. அடுத்து ஐபிஎல் தொடர் தான் உள்ளது.
தென் ஆப்ரிக்கா தொடரில் கோலி 14 இன்னிங்ஸில் 871 ரன்கள் குவித்து நல்ல பார்மில் உள்ளார்.

0 comments:
Post a Comment