மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொள்வதற்காக கலைவாணர் அரங்கம் வந்தார்.
ஆனால் அவருக்கு அரங்கினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் வந்தபின் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களை கருதி அனுமதியளிக்கவில்லையென்று போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் வந்தபின் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களை கருதி அனுமதியளிக்கவில்லையென்று போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த நீண்ட வாக்குவாதத்துக்கு பிறகு விழாவில் பங்கேற்க தமிழிசைக்கு அனுமதி வழங்கினர்.
விழாவிற்கு தாமதமாக வந்ததால் தமிழக பாஜக தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

0 comments:
Post a Comment