கமல் கட்சியின் கொடி, கொள்கை ஆகியவை தென்னிந்தியாவையும், திராவிடத்தையும் குறிக்கும் வகையில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படம் தேசிய அளவில் நடந்த ஒரு ஊழலை வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலான கதை என்று கூறப்படுகிறது.
செய்திகளை விரைவாக பெற எமது முகநூலில் இணைந்திருங்கள்
அதாவது கடந்த சில நாட்களாக நாட்டையே பரபரப்பாக்கியுள்ள ஒரு விஷயம் வங்கியில் ரூ.11500 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி என்ற தொழிலதிபர் தான். இந்த ஹாட்டான டாப்பிக் தான் ஷங்கரின் கைவண்ணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
நீரவ் மோடியின் மோசடியை கையில் எடுக்க்கும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் நிச்சயம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment